பெங்களூரில் கட்டுமானப் பணியின் போது, கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெங்களூரின் பாபுசபால்யாவில், கட்டுமான தளம் ஒன்றில் 20 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டடம் இடிந்தது விழுந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது.