states

img

வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களித்தேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிறகு, நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும், 40 சதவிகித ஊழலுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பதிவில் தெரித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார். தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "நாம் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தேர்தலிலும், அரசியலிலும் தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் நமக்கு கிடைக்கும் இடம் இது. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். கர்நாடகா அழகான மாநிலம். நல்லிணக்கத்தை பாதுகாப்போம்." இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், "நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும், 40 சதவிகித ஊழலுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள். கர்நாடகாவுக்காக வாக்களியுங்கள்!" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பதிவில் தெரித்துள்ளார்.