கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள முடேனூர் கிராமத்தில் கழிவுகள் கலந்த தண்ணீரை குடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 20 குழந்தைகள் உட்பட 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள முடேனூர் கிராமத்தில் குடிநீர் விநியோக குழாயில் விரிசல் ஏற்பட்டு கழிவுகள் கலந்துவந்த தண்ணீர் குடித்ததால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 44 ஆண்கள், 30 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என மொத்தம் 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, மாநில நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.