states

img

உட்கல் பல்கலை-யில் தாக்குதல் - 2 ஏபிவிபி நிர்வாகிகள் கைது

ஒடிசா மாநிலத்தில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 ஏபிவிபி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.  

ஒடிசா மாநிலத்தில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் 'இந்திய அரசியலமைப்பு மற்றும் கல்விக் கொள்கை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கத்தில் ஜே.என்.யு பேராசிரியர் சூரஜித் மஜும்தார், வரலாறு திரிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியபோது, ஏபிவிபி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஏபிவிபி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.