states

img

ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து - 19 பேர் படுகாயம்

ஒடிசாவில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் நீராவிக்குழாய் வெடித்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேரமண்டலி ஆலையில் நீராவிக்குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் தீக்காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எரிவாயு குழாய் வெடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.