states

img

உத்தரகண்ட்: மின்மாற்றி வெடித்து 15 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் உள்ள மின்மாற்றி திடீரென வெடித்தது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திர்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.