states

கொரோனா கண்காணிப்பை தீவிரபடுத்த உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்

கொரோனா அதிகரித்து வருவதால் கண்காணிப்பை இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளையும் தீவிரப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை (SEARO) கண்காணிப்பை வலுப்படுத்தவும், கோவிட் -19 மற்றும் அதன் காரணமாகச் சுவாச நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியது.

கடந்த 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவில், 656 பேர் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3742 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் ஒரு புதிய இறப்பு பதிவாகியுள்ள நிலையில், கோவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,333 ஆக உயர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், கோவிட் வைரஸ் உலகளவில் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து உருமாறி, பரவி வருகிறது.

"JN.1 ஆல் ஆபத்து குறைவாக இருப்பதாக தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன, நமது பதிலுக்கு ஏற்ப இந்த வைரஸ்களின் பரிணாமத்தை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்காக, நாடுகள் கண்காணிப்பு மற்றும் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும்” என்று டாக்டர் சிங் கூறினார்.