சண்டிகர் மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மூத்த தலைவருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல ரவுடியான சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற் றது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2022ஆம் ஆண்டு பயங்கரவாத வழக்குக ளில் கைதாகி குஜராத் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2022இல் ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் அடைக்கப் பட்டிருந்தார். அப்போது பஞ்சாப் போலீசா ரின் காவலில் லாரன்ஸ் பிஷ்னோய் தனி யார் தொலைக்காட்சி ஒன்றில் வீடியோ வாயிலாக பேட்டி அளித்தார். இந்த விவகா ரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வந்தனர். விசாரணை நிறைவு பெற்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரன்ஸ் பிஷ்னோய் காவலில் இருந்த போது அலட்சியமாக செயல்பட்டதாக பஞ்சாப் உள்துறை அமைச்சகம் இரண்டு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 7 பேரை இடைநீக்கம் செய்து உத்தர விட்டுள்ளது. டிஎஸ்பி குர்ஷர் சிங் சந்து, டிஎஸ்பி சமர் வனீத், உதவி ஆய்வாளர்கள் ரீனா, ஜகத்பால் ஜங்கு, ஷகன்ஜித் சிங், முக்தியார் சிங், ஹெட் கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் ஆகிய ஏழு பேரை பஞ்சாப் அரசு இடைநீக்கம் செய்துள்ளது.