வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மகால், ஆக்ரா கோட்டைக்கு குடிநீர் மற்றும் சொத்து வரிக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள வரலாற்று நினைவு சின்னமான, தாஜ்மகாலுக்கு குடிநீர் வரியாக ரூ.1.9 கோடிக்கு, சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் என மொத்தம் ரூ.1.91 கோடி வரி செலுத்துமாறும் உ.பி பாஜக அரசின் கீழ் இயங்கும் ஆக்ரா மாநகராட்சி விதித்துள்ளது. அதேபோல், ஆக்ரா கோட்டைக்கு மொத்தம் ரூ.5 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் வரி செலுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் ஆய்வு மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தின் கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், "நினைவுச் சின்னங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாது. தண்ணீருக்கு வணிக ரீதியான பயன்பாடு இல்லாததால் நாங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை" என்று தெரிவித்துள்ளார்.