states

img

காதலித்ததால் இஸ்லாமியரின் வீட்டை கொழுத்திய இந்துதுவா கும்பல்

உத்தரபிரதேசத்தில் இந்து பெண்ணை காதலித்ததற்காக இஸ்லாமியருக்கு சொந்தமான இரண்டு வீடுகளை இந்துதுவா கும்பல் கொழுத்திய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இந்து பெண்ணை இஸ்லாமிய இளைஞர் சஜித் குரேசி காதலித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தரம் ஜாக்ரன் சமன்வே சங்க் என்ற இந்துத்துவ அமைப்பினர் ஏப்ரல் 15 தேதி ஆக்ராவின் ருனக்டா பகுதியில் உடற்பயற்சிக் கூடம் நடத்தி வரும் சஜித் குரேசியின் வீடு மற்றும் அதை ஒட்டி உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான மற்றொரு வீட்டையும் இந்துத்துவாவினர் தீக்கிரையாக்கினர். மேலும் 22 வயதான பெண்மணியை சஜித் குரேசி கடத்தி சென்றிருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவாவினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த இளைஞருடன் சென்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததற்காக காவல்நிலைய பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் காவல் நிலைய அதிகாரிக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.