2024ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் மற்றும் வேலூர் ராஜகுப்பம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் பரிசாக தலா ரூ.50,000, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்