states

img

15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

ராமேஸ்வரம்,செப்.29- தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று மீன் பிடிப்பதற்காக அனுமதி பெற்று கடலுக்கு விசைப்படகுகளில் சென்றுள்ளனர்.
அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
இலங்கை கடற்படை அடிக்கடி தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்வது வழக்கமாகியுள்ளது. இது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.