ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் புகுந்த 3 தெரு நாய்கள், வார்டில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தையை கடித்துக் குதறியதில் குழந்தை பலியான கொடூரம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் உடல்நல குறைவு ஏற்பட்டு சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது மனைவி ரேகாவும் மூன்று குழந்தைகளும் அந்த மருத்துவமனையிலேயே வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் புகுந்த 3 தெரு நாய்கள், வார்டில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தையை இழுத்துச் சென்று கடித்துக் குதறியதில் குழந்தை பலியான கொடூரம் நடந்துள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.