states

img

ஜெய்ப்பூரில் அரை மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 4:10 மணியளவில் பிங்க் நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது, பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம் காலை 4.22 மணிக்கு ராஜஸ்தான் தலைநகரைத் தாக்கியது. ரிக்டர் அளவில் 3.1 ஆகவும், 3-வது நிலநடுக்கம் அதிகாலை 4.25 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்  உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  
நேற்று அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் கிழக்கே 61 கி.மீ தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.