புதுச்சேரி, மே 11- கேரளாவில் கோழி இறைச்சியை கொண்டு தயாரிக்கப் படும் சவர்மா சாப்பிட்ட மாணவி மரண மடைந்தார். தமிழ கத்திலும் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து புதுவையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு தனியார் ஓட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கனில் அளவுக்கதி கமாக கலர்பவுடர் சேர்க்கப்பட்டு இருந்ததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பினாயில் மற்றும் உப்பை களை கொட்டி அழித்தனர். மேலும், பேருந்து நிலையம் அருகிலிருந்த அனைத்து கடைகளிலும் சிக்கனை பறி முதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை செயலர் உதயகுமார் கூறும்போது, “பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு வகைகளை செய்து விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.