states

img

எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பணிச்சுமையால் உயிரிழப்பு

புனே, எர்னெஸ்ட் & யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் அன்னா செபாஸ்டின்(26) பணிச்சுமையால் உயிரிழந்தது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த அன்னா செபாஸ்டின் பட்டய கணக்காளர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எர்னெஸ்ட்& யங் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய நான்காவது அக்கவுண்டிங் நிறுவனமாகும்.நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியனுக்கு பணிச்சுமை ஏற்படும் வகையில் அதிகமான வேலை வழங்கப்பட்டதாகவும், அதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதுவே அவரது இறப்புக்கு காரணம் என்றும் அவரது தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த நிறுவனத்திற்காக எனது மகள் விழுந்து விழுந்து வேலை பார்த்தாலோ அவளது இறுதி சடங்குக்கு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட வரவில்லை என கண்ணீர் மல்க அவர் தன்னுடைய கடிதத்தில் வேதனையை தெரிவித்துள்ளார்.