ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் - புதிய வரைவு விதி விவசாயிகளுக்கு எதிரானது
அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்குவதற்கான புதிய வரைவு விதி விவசாயிகளுக்கு எதிரானது என அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்கு வதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்கள், கடன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற் படுத்தும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், விவசாயத் தேவைகளுக்காக தங்க நகைக் கடன்களை பெறும் வழக்கம் அதிக மாக உள்ளது. அதனால் ரிசர்வ் வங்கியின் அறி விப்பிற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு விவசாயக் குழுக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதே போல சிறு, குறு துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. 80% இலிருந்து 75% ஆக குறைப்பு ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன் நடை முறைகளை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில், கடனின் அதிகபட்ச மதிப்பு விகிதத்தை (Loan to Value - LTV) முன்பு இருந்த 80% இலி ருந்து 75% ஆக குறைத்துள்ளது. இது கடன் தொகையை குறைக்கும் மற்றும் பயிர் சுழற்சி யுடன் தொடர்புடைய பணப்பற்றாக்குறையை சமாளிக்க தங்க கடன்களைப் பெற்று வந்த சிறு மற்றும் குறு விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக புதிய வரைவில் ரிசர்வ் வங்கி கடன் பெறுவோரின் திருப்பிச் செலுத்தும் திறன், வழங்கப்படும் கடனுடன் ஒத்துப்போக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சிறு, குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்க ளுக்கு வருமான ஆவணங்களை வழங்குவது நடைமுறையில் கடினம். மேலும், தங்கக் கடன் பெற அசல் கொள் முதல் ரசீது அல்லது உரிமை ஆதாரம் தேவை என்று ஒரு நிபந்தனை கூறுகிறது. பல குடும்பங்க ளில், தங்கம் பரம்பரையாக கிடைக்கப்பெற்றது. அதனால் ஆவணங்களை வழங்குவது கடினமா னது ஆகும். இதுபோன்ற கடுமையான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகள் பல ரிசர்வ் வங்கியின் புதிய வரைவில் உள்ளன. அதனால் ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதல்க ளை மறுபரிசீலனை செய்து அதை விவசாயி களுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்றும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அடமானம் இல்லாத கடன் களை உறுதி செய்ய வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.