states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலித், பழங்குடியினர் மீதான சுரண்டல் அதிகரிப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

கடந்த 11 ஆண்டுகளில் தலித், பழங்குடியினர் மீதான சுரண்டல் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் இந்திய ஜனநாயகம், பொரு ளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பி ற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதாவது பின்வாசல் வழியாக  அரசாங்கங்களை கவிழ்த்து, வலுக் கட்டாயமாக சர்வாதிகாரத்தை திணித் துள்ளது. குறிப்பாக மாநிலங்களின் உரி மைகள் புறக்கணிக்கப்பட்டு, கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது மோடி அரசு.  சமூகத்தில் வெறுப்பு, அச்சுறுத்தல் கள் மற்றும் பயத்தைப் பரப்ப தொடர்ச்சி யான முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. தலித், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான பிரிவினரின் மீதான சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. மிக முக்கியமாக அவர்களுக் கான இடஒதுக்கீடு மற்றும் சம உரி மைகளைப் பறிக்கும் சதி தொடர்கிறது. மணிப்பூரில் நடைபெறும் முடிவில்லா வன்முறையே பாஜகவின் நிர்வாகத் தோல்விக்கு மிகப்பெரிய சான்றாகும்” என அவர் கூறியுள்ளார். அமராவதி

ஆந்திராவில் பழங்குடி சிறுமி படுகொலை

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதே சம், குஜராத் உள்ளிட்ட மாநி லங்களைப் போன்று, பாஜக -  தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் ஆந்திராவிலும் தலித், பழங் குடி மக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் பழங்குடி சிறுமி பெண் படுகொலை செய்யப் பட்டார். பழங்குடி சிறுமி பாலியல் வன் முறையால் படுகொலை செய்யப்பட்டா ரா?, அல்லது வேறு எதுவும் காரணமாக என இதுவரை ஆந்திர காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், அனந்தபூரில் பழங்கு டியின சிறுமியின் மரணத்திற்கு தெலுங்கு தேசம் தலைமையிலான அரசுதான் கார ணம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொ டர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூறுகையில், “கடந்த வாரம் ஒரு ஆண் குழந்தை காணா மல் போனது. 8 நாட்கள் ஆகியும், குறைந்தபட்சம் தடயம்கூட கண்டு பிடிக்க முடியாத திறமையற்ற கூட்டணி  அரசுதான் தெலுங்கு தேசம் தலைமை யிலான ஆந்திர அரசு. தற்போது அனந்த புரத்தில் 10ஆவது படிக்கும் பழங்குடி சிறுமி  சாகே தன்மயி கொலை செய்யப் பட்டுள்ளார். ஒரு பெண்ணான உள்துறை அமைச்சர் அனிதா அவர்களே! இது உங்கள் திறமையின்மையினால் நிகழ்ந் தது என்பதை புரிந்து கொள்ள முடியு மா?” என அதில் கூறப்பட்டுள்ளது. மும்பை

“மும்பையையும், மகாராஷ்டிராவையும் பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது”

மும்பையையும், மகாராஷ்டி ராவையும் விழுங்கிக் கொண்டி ருக்கிறது என  சிவசேனா (உத் தவ்) கட்சியின் பொதுச் செயலாளர் ஆதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக செய்தியாளர்க ளிடம் அவர் மேலும் கூறுகையில், “மகாராஷ்டிராவின் நலனுக்காக பாடு படும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க  சிவசேனா (உத்தவ்) தயாராக இருக்கிறது. ஆனால் மராத்தி மக்கள் நலனுக்காக பாடுபடும் நபர்களாக இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், ஆளும் பாஜக மும்பை யையும் மகாராஷ்டிராவையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவால் மகா ராஷ்டிராவிற்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இதனை விரைவில் முடி வுக்கு கொண்டு வருவோம்” என கூறினார்.