states

img

தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குத

தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல்

தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த  செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் தில்லு முல்லு  வேலைகளுடன் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது. இதனால் தில்லி பல்கலைக்கழ கத்தில் வகுப்புவாத சம்பவங்கள் தீவிர மடைந்துள்ளன.  இந்நிலையில், தில்லி பல்கலைக்கழ கத்தின் வடக்கு வளாகத்தில் செயல் படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூ ரியில் சுஜித் குமார் என்ற பேராசிரியர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் வியாழனன்று அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வென்ற தேசிய மாண வர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பி னர்கள் தாக்கியது குறித்து அலுவலக அறையில் காவல்துறை முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது நீங்கள் எப்படி எங்கள் அமைப்பினரை விசாரிக்கலாம் என்று கூறி அவரை மாண வர் யூனியனின் இணைச் செயலாளரான தீபிகா ஜா (ஏபிவிபி) மற்றும் 2 ஏபிவிபி உறுப்பினர்கள் வியாழக்கிழமை அன்று காவல்துறை முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர். தீபிகா ஜா பேராசிரியரின் கன்னத்தில் அறையும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைர லாகி வருகிறது. தில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மற்ற மாணவர் அமைப்புகள் சுஜித் குமார் மீதான தாக்குதலை கண்டித்து ஏபிவிபி மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி வரு கின்றனர். முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை மத்தியப்பிரதேசத்தில் உள்ள  அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.