ஹரியானாவில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பிரச்சா ரம் செய்த காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி, இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதி ரான போராட்டம் என தெரி வித்துள்ளார்.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு அக்.5 அன்று ஒரேகட்டமாக தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் அண்மையில் காங்கிரசில் இணை ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா பேரவை தொகு தியில் போட்டியிடுகிறார். இந்நிலை யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புதனன்று ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் தற்போது நிலங்கள், துறைமு கங்கள், விமான நிலையங்கள் தொழில்சாலைகள் அனைத்தும் அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு தரப் பட்டு விட்டன. ஆனால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாய துறைகளில் எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்க முடிய வில்லை. ஒருசில தொழிலதிபர்க ளுக்காகவே இயங்கும் பாஜக அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. ஏனெனில் பாஜகவின் கொள்கைகள் சரியாக இல்லை எனத் தெரிவித்தார்.
அக்னி வீரர் திட்டத்தால் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதி யம் கிடைக்காது. மேலும் நான் காண்டு பணியாற்றிபின் அவர்கள் மீண்டும் வேலை தேட வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் மோடிக்கு தில்லி எல்லையில் போராடிய விவசாயிகளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. விவசாயி கள், இளைஞர்கள், தொழிலா ளர்கள், பெண்கள் உள்பட அனை வரும் கடந்த 10 ஆண்டுகளாக தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். நடைபெறவுள்ள பேரவை தேர்தல் அநீதி, பொய், தீமைகளுக்கு எதி ரான போர். மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.