சண்டிகர், டிச.11- “முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஹரி யானாவில் தொழுகைக்காக வழங் கப்பட்ட அனைத்து இடங்களும் திரும் பப் பெறப்படும்” என்று ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். தில்லிக்கு அருகிலுள்ள தொழில் நகரம் குர்கான். இங்கு ‘செக்டர் 37’ பகுதியில் வட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்ற னர். இவர்களுக்கு மூன்று மசூதிகள் மட்டுமே இருப்பதால், வெள்ளிக்கிழ மையன்று சிறப்பு தொழுகை நாட்க ளில், தனியார் இடங்களை வாட கைக்குப் பெற்று தொழுகை நடத்தி வந்தனர். குர்கான் மாநகராட்சியும் தொழுகைக்காக 106 இடங்களை ஒதுக்கிக் கொடுத்திருந்தது. ஆனால், 22 இந்துத்துவா அமைப்புகள், ‘சன்யுக்த் இந்து சங் கர்ஷ் சமிதி’ என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் தொழு கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது சாணத்தை எறிவதும், அந்த இடங்களில் ஜெய் ஸ்ரீராம் என்று கூப்பாடு போடுவது மாக தாக்குதல்களை நடத்தி வரு கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை யன்றும் கூட முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடத்தில் வேண்டுமென்றே தலைமைத் தளபதி பிபின் ராவத் துக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தை இந்துத்துவா அமைப்பினர் நடத்தினர். இந்நிலையில்தான் வெள்ளிக்கிழ மையன்று குர்கான் மாநகராட்சி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்திய முதல்வர் மனோகர் லால் கட்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், “திறந்த வெளியில் முஸ்லிம் கள் நமாஸ் செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. விரைவி்ல் இதற்கு சுமூகமான முடிவு எட்டப்படும். ஆக்கி ரமிப்பில் இருக்கும் வக்பு வாரியத்தின் இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையும் முஸ் லிம்கள் தங்கள் சொந்த இடங்க ளில் தொழுகை நடத்துவது நல்லது. இவர்கள் பொதுவெளியில் நடத்து வதால் மற்ற மதங்களுடன் நிகழும் மோதலால் மதக்கலவரம் வரும் ஆபத்துக்கள் உள்ளன” என்று பய முறுத்தியுள்ளார்.