states

img

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேச்சு 300 எம்.பி.க்கள் கிடைத்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீட்போம்!

ஸ்ரீநகர், டிச.2- “2024 நாடாளுமன்றத் தேர்த லில் காங்கிரசுக்கு 300 இடங்கள் கிடைக்குமானால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ மீட்போம்” என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவ ரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கதி பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகை யில் இதனை அவர் தெரிவித்துள் ளார். அவர் மேலும் கூறியிருப்பதா வது: “சட்டப்பிரிவு 370 ரத்து தொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பி னும், அதனை ஒன்றிய அரசால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு-தான் பிரிவு 370-ஐ நீக்கியது. அத னால், அது அதனை மீட்காது. காங்கிரஸ் கட்சி மீட்க வேண்டு மானால், அதற்கு 300 எம்.பி.க்கள் வேண்டும். 2024 தேர்தலில் காங்கி ரசுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என நான் கருதவில்லை.

எனவே, தற்போதைக்கு சட்டப்பிரிவு 370-ஐ மீட்பது பற்றி எந்த பொய்யான வாக் குறுதியையும் கொடுக்க மாட்டேன். கடவுள் எங்களுக்கு 300 எம்.பி.க்களை தரும்போது அது நடக்கும். இப்போதைக்கு செய்ய வேண் டியது, மாநில அந்தஸ்தை மீட்டெ டுப்பதும், காஷ்மீரில் விரைந்து சட்டப்பேரவை தேர்தலை நடத்தச் செய்வதும் மட்டும்தான்” என்று குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார். ஆசாத்தின் இந்தப் பேச்சை, தேசிய மாநாட்டுக் கட்சித் தலை வர் உமர் அப்துல்லா விமர்சித்துள் ளார். “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதற்கு முன்பே மூத்த காங்கி ரஸ் தலைவர் தோல்வியை ஒப்புக் கொண்டு இருக்கிறார்” என்று உமர் குறிப்பிட்டுள்ளார்.