states

img

ஜெய்ஸ்ரீராம் கூறச்சொல்லி முஸ்லிம் இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மதவெறிக் கும்பல்!

லக்னோ, ஜூன் 19 - பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஜெய்ஸ்ரீராம் கூறுமாறு முஸ்லிம் இளைஞர் ஒருவரை, மரத்தில் கட்டிவைத்து தாக்கி, தலை யை மொட்டையடித்து சித்ரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஆதித்ய நாத் அரசின் காவல்துறையானது, பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் மீதே திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி அவரை சிறையில் அடைத்த கொடு மையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. புலந்த்சாஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாஹில் கான். 28 வயது இளைஞரான இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். ஜூன் 14 அன்று வயர் எனும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்காக சென்றவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை.  இதனிடையே, சாஹிலின் சகோதரி ரூபீனா (25), தனக்கு மொபைலில் வந்த வீடியோவைத் திறந்து பார்த்தபோது, சாஹில்கானை ஒரு கும்பல், தலை யைப் பாதி மொட்டையடித்து, ஜெய்ஸ்ரீ ராம் கூறச்சொல்லி மரத்தில் கட்டி வைத்து தாக்குவது தெரியவந்துள் ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ககோட் காவல்நிலை யத்திற்கு விரைந்து சென்று, தனது சகோதரனை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார்.

ஆனால், புகாரை பதிவுசெய்ய மறுத்துவிட்ட போலீசார், பாதிக்கப் பட்ட சாஹில்கான் மீதே கத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி, ஜூன் 15 அன்று கைது செய்துள்ளனர். அத்து டன், அவரைச் சிறைக்கும் அனுப்பி யுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலை தளங் களில் வெளியான நிலையில், உ.பி. போலீசாருக்கு நாடு முழுவதும் கடும்  கண்டனங்கள் எழுந்தன. ஒருவர் திருடினார் என்றே வைத்துக் கொண்டா லும், அவரின் தலையை மொட்டை யடிப்பதற்கும், ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறச்சொல்லி.. அதுவும் இஸ்லாமிய இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கும் என்ன அவசியம் உள்ளது? என்ற விவாதங்கள் முன்னுக்கு வந்தன. மேலும், இஸ்லாமியர் ஒருவரை, ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறச்சொல்லி மரத்தில் கட்டிவைத்து தாக்கியும், மொட்டையடித்து சித்ரவதை செய்த கும்பலை கைது செய்யாத போலீசார், பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே கத்தி வைத்திருந்தார் என்று கூறி சிறைக்கு அனுப்புவது எப்படி நீதியாகும் என்றும் விவா தங்கள் எழுந்தன. உண்மையில், மதிய உணவுக்காக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் சாஹில் கானை, மதவெறிக் கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது.  இந்த உண்மைகள் அனைத்தும் தற்போது தெரியவந்துள்ள பின்னணியில், கஜேந்திரா, சவுரப், தன்னி ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சாஹில்கானை பொய் வழக் கில் சிறையில் தள்ளிய ககோட் காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் சிங், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.