states

img

அகிலேஷ் யாதவுக்கு கொரோனா

சங்கரன்கோவில், டிச.23- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வை அமல்படுத்த கோரி சிஐடியு தென்காசி மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கம் மற்றும் புளி யங்குடி சிந்தாமணி டிஎன் புதுக்குடி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பாக விசைத்தறி தொழிலாளர் சங்க தென்காசி மாவட்டத் தலைவர் மாரி யப்பன் தலைமையில் சங்கரன்கோவி லில் மறியல் போராட்டம் நடை பெற்றது. விசைத்தறி சங்கத்தின் நிர்வாகி கள் ரத்தனவேல், மாணிக்கம், லட்சுமி வேலு, முருகன் ,சக்திவேல், சுப்பிர மணியன், சுப்பையா ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னர். சிஐடியு தென்காசி மாவட்டச் செய லாளர் எம்.வேல்முருகன், விசைத்தறி சங்கத்தின் கௌரவத் தலைவர் அசோக், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மகாவிஷ்ணு மற்றும் விசைத் தறி தொழிலாளர்கள் 800 பேர் பங் கேற்ற சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  

ஏற்கனவே கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தொழி லாளர் துணை ஆணையாளர், தொழி லாளர் உதவி ஆணையாளர், வட் டாட்சியர், காவல்துறை உதவி கண்கா ணிப்பாளர் போன்ற அதிகாரிகள் முன்பு பலமுறை பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு ஒப்பந்தம் போட்ட பத்து சத வீத கூலி உயர்வை இதுவரை அமல் படுத்தவில்லை. எனவே, ஒப்பந் தத்தை அமல்படுத்தாத விசைத்தறி முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உடனடியாக விசைத்தறி முதலாளிகள் அமல்படுத்தக் கோரி யும் மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் துறை அதிகாரிகள், விசைத்தறி முத லாளிகள் மீது தமிழக அரசு நடவ டிக்கை எடுக்கக் கோரியும் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதில் 343 ஆண்கள் 75 பெண்கள் என மொத் தம் 418 விசைத்தறி தொழிலாளர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய் தனர்.

;