states

img

ராஜஸ்தானில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படூர் சிங் (17) என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ராஜஸ்தானின் கோட்டா, பயிற்சி மையங்களின் நகரமான திகழ்கிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த படூர் சிங் (17 வயது) என்ற மாணவர், கடந்த 2 மாதங்களாக விடுதியில் தங்கி ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி மையத்திற்கு வராத படூர் சிங்கை தேடி நண்பர் ஒருவர் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, படூர் சிங் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தார். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள வந்த 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.