கொல்கத்தா, ஜூலை 8 - மேற்குவங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு, ஆளும் திரி ணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட வன்முறையால், ரத்தக் களறியாக மாறியது. வாக்குச் சாவடி கைப்பற்றல், தீ வைப்பு, குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என மாநிலம் முழுவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த வன்முறை யில் மொத்தம் 18 உயிர்கள் பறிக்கப் பட்டுள்ளன. பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலமே வன்முறைக் களமாக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அதிக மாக இருக்கும் இடங்களைக் குறி வைத்து, வாக்குச் சீட்டுக்களை கிழித்துப் போட்டும், வாக்குப் பெட்டி களைத் தூக்கிக் கொண்டு ஓடியும், வாக்குச் சாவடி மையத்திற்கே தீ வைத்தும், திரிணாமுல் குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் மீதும் கத்தி, அரி வாள், வெடிகுண்டு, துப்பாக்கி உள் ளிட்ட ஆயுதங்களைக் கொண்டும் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர்.
ஆனால், கடந்த 10 ஆண்டு களில் இல்லாத வகையில், இந்த முறை பொதுமக்களே பல்வேறு இடங்களில், திரிணாமுல் குண்டர் களுக்கு எதிராக திரண்டெழுந்தனர். எதிர் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, ஹூக்ளி போன்ற மாவட்டங்களில் பெண்களே திரிணா முல் குண்டர்களுக்கு எதிராக திரும்பி னர். இங்குள்ள கோகாட் கிராமத்தின் இரண்டு வாக்குச் சாவடிகளையும் திரிணாமுல் குண்டர்கள் ஆக்கிரமித்த னர். அப்போது, அங்கிருந்த பெண் களே வாக்குச்சாவடிக்கு அரணாக வந்து நின்றதை கண்ட திரிணாமுல் கட்சி குண்டர்கள் தப்பி ஓடினர். அந்த வாக்குச் சாவடிக்கு பெண்களே பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். அதே மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கலவரம் செய்ய வந்த திரிணாமு கட்சியினரை பொதுமக்களே சிறைப் பிடித்து திருப்பி அனுப்பினர். இது போன்று பல இடங்களில் திரிணா ல் காங்கிரஸ் கட்சியினரின் வன்முறை யை எதிர்த்து மக்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்றனர்.
பொதுமக்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத திரிணாமுல் குண்டர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று சிதறியோடிய சம்ப வங்களும் பல இடங்களில் நடந்துள் ளன. அவ்வாறு பலர் பொதுமக்களி டம் சிக்கிக் கொண்ட நிலையில், வன்முறைக்கு பலியாகியுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமையன்று வாக்குப் பதி வின் போது நடைபெற்ற வன்முறை யில் 18 பேர் வரை பலியாகி இருக்கும் நிலையில், அவர்களில் 14 பேர் வரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யினர் என்று தெரியவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இவர், திரிணா முல் காங்கிரசிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்ட நிலை யில், அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே படுகொலை செய்துள்ள தாக கூறப்படுகிறது. வேட்புமனு துவங்கியது முதலே, ஆளும் திரிணாமுல் குண்டர்களும், பாஜகவினரும் வன்முறையை அரங்கேற்றி வருவதால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. கூடு தலான மத்திய காவல் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை யன்று (ஜூலை 8) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், இடது முன்னணி ஏற்கெனவே எச்ச ரிக்கை விடுத்திருந்ததைப் போல, திரிணாமுல் குண்டர்கள் வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் அவர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத பொதுமக்களே பல இடங்களில் அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 5 பேர், கூச் பிகார் மாவட்டத்தில் 3 பேர், கிழக்கு பர்துவானில் 2 பேர், வடக்கு தினாஜ்பூரில் 2 பேர், மால்டா, நாடியா, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என பலியாகியுள்ளனர். திரிணாமுல் காங்கிரசின் இந்த பயங்கரவாதத்தை கண்டித்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு இடது முன்னணி உடனடி யாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகம்மது சலீம், அரசியல் தலைமை குழு உறுப்பினர் சூரியகாந்த் மிஸ்ரா, மூத்த தலைவர் பிமன் பாசு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.