மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த கடந்த நவம்பர் 17-ஆம் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, இன்று மோகன் யாதவ் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா, ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.