states

img

மத்தியப்பிரதேசம்: சென் ஜோசப் பள்ளி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியின் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா நகரத்தில் உள்ள சென் ஜோசப் பள்ளியில் 8 மாணவர்கள் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து அங்கு திரண்ட பஜ்ரங்தள் அமைப்பினர் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆசியர்களும் மாணவர்களும் பதறியடித்து வெளியேறினர்.
கல்வீச்சு தாக்குதலில் பள்ளியின் கதவுகள், கண்ணாடி,  ஜன்னல்கள் சேதமடைந்தன. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி தாளாளர் கூறியதாவது பள்ளி மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேசமயம் பள்ளியில் மத மாற்றம் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் தங்கள் பள்ளியில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

;