மணிப்பூரில் நிர்வாக அமைப்பு சீர்குலைந்துள்ளது. தற்போதைய அரசால் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்சனை தீவிரமாக உள்ளது. முதல்வர் பைரேன் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தோல்வியடைந்த பாஜக அரசால் மாநிலம் ஸ்தம்பித்துள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒன்றிய அரசின் தலையீடு அவசியம். ஆனால், இதில் தலையிட பிரதமரும், ஒன்றிய அரசும் தயாராக இல்லை. மணிப்பூர், குக்கி - மெய்டெய் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குக்கி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு கூட வர முடியாது. குக்கிகள் மெய்டெய் பிரதேசத்திலும், மெய்டெய்கள் குக்கி பிரதேசத்திலும் நுழைய முடியாது என்கிற நிலை உள்ளது.