பாஜகவின் இழிவான பிளவுவாத அரசிய லால் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. வன்முறைக்கு இதுவரை 200 பேர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக முகாம்களில் உயிர் பிழைத்து வருகின்றனர்.
வன்முறைக்கு காரணமான மெய்டெய் மக்களுக்கு பழங் குடி அந்தஸ்து வழங்கக் கூறிய உத்தரவை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்ற பின்பும், மணிப்பூ ரில் வன்முறை சம்பவங்கள் குறையவில்லை. நீதிமன்ற வாபஸ் உத்தரவுக்குப் பின்னர் மெய்டெய் பிரிவினர் மாநிலம் முழுவதும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வரு கின்றனர்.
இந்நிலையில், இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங்கை செவ்வாயன்று இரவு 7 மணியளவில் மெய்டெய் பிரி வைச் சேர்ந்த ஆரம்பை தென்க் கோல் என்ற அமைப்பின் 200 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியது. மேலும் அமித் சிங்கின் வீடு மீது துப் பாக்கிச்சூடு நடத்தி, அங்கு நின்றி ருந்த 4 வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது. பாதுகாப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி நள்ளிரவில் அமித் சிங்கை குண் டுக் காயங்களுடன் மீட்டனர். தற்போது அமித் சிங் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணுவம்
கிழக்கு இம்பால் பகுதியில் நிலைமை மோசமாகியுள்ளதால், மணிப்பூர் பாஜக அரசு, ராணு வத்திற்கு அழைப்பு விடுத்துள் ளது. ராணுவம் வரும் வரை நிலை மையை சமாளிக்க, இம்பால் கிழக்கு பகுதியில் 4 பிரிவு அசாம் ரைபிள் படை நிலைநிறுத்தப்பட் டுள்ளது.
போலீஸ் அதிகாரி கடத்தல் ஏன்?
வாகனத் திருட்டில் ஈடுபட்ட தாக ஆரம்பை தென்க்கோல் கும் பலைச் சேர்ந்த 6 பேரை அமித் சிங் கைது செய்த காரணத்தால் இந்தக் கடத்தல், தாக்குதல் சம் பவம் நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொட ர்ந்து கைது செய்யப்பட்டுள்ள 6 பேரை விடுவிக்கக் கோரி மெய்ரா பைபிஸ் (மெய்டெய் பெண்கள் குழு) என்ற அமைப்பி னர் போராட்டம் நடத்தினர். இத னால் கிழக்கு இம்பால் பகுதியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.