புனே நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். வீட்டுவசதி சங்கத்தில் வசிப்பவர்கள் செப்டிக் டேங்கிற்கு வெளியே மொத்தம் மூன்று ஜோடி காலணிகளை பார்த்ததாக போலீச்டம் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது நபர் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கியிருக்கலாம். மூன்றாவது தொழிலாளியை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை கைமுறையாக சுத்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம், நகரின் கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பாக சுத்தம் செய்து பராமரிக்க 'பாண்டிகூட்' என்ற மூன்று ரோபோக்களை நிறுவியுள்ளது.இந்த உயர் தொழில்நுட்ப ரோபோக்கள் கழிவுநீரை திறம்பட சுத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.