பெங்களூரு, டிச.31- கர்நாடக மாநில சாலைப் போக்கு வரத்துக் கழகத்தில் எட்டாண்டுகள் பணி யாற்றி விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, அரசுப் பேருந்து ஓட்டுநரான ஜி.எஸ்.உமேஷ் தனது பணியை முடித்துவிட்டு சித்ரதுர்காவில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை விபத் தில் பலியானார். உமேஷ்க்கு மனைவி மற்றும் மூன்று, இரண்டு வயதில் இரு மகன்கள் உள்ளனர். உமேஷ் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி தலைவரி டமிருந்து ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகையை அவரது குடும்பம் பெற உள்ளது. இதுகுறித்து கேஎஸ்ஆர்டிசி நிர்வாக இயக்குநர் அன்புகுமார் கூறுகையில், “நவம் பர் மாதம் இரண்டு நிறுவனங்களுடன் ஊழி யர்களுக்கு காப்பீடு வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த அடிப்படை யில் ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளது.
ஊழியர் நலனுக்கான இரண்டு ஒப்பந்தங்கள்
கே.எஸ்.ஆர்.டி.சி., ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் (எஸ்.பி.ஐ.) ஒரு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி ஓட்டு நர்கள் விபத்தில் இறந்தால் அல்லது பலத்த காயம் அடைந்தால் (பணியின் போதும் பணி யில் இல்லாத போதும்) பணியில் இல்லாத போது) ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்காக ஊழியர் பிரீமியம் தொகை செலுத்த வேண்டியதில்லை. மற்றொரு ஒப்பந்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செய்துள் ளது. இதன் மூலம் ரூ.50 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்கு ஆண்டு பிரீமியமாக ரூ.885 செலுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட ஓட்டுநர் இறந்து விட்டால் அவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவர். விபத்தில் பலத்த காயம் அடைந்தாலும் ஊழியருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு கிடைக்கும்.