states

மாநிலம் முழுவதும் 34 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு, மே 12 -  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையன்று காலை 8 மணிக்குத் துவங்குகிறது. 224 தொகுதிகளில் பதி வான வாக்குகள், 34 மையங்களில் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே வாக்குப்பதிவு நடந்துள்ள தால், தேர்தல் முடிவுகள் பிற்பகல் 1 மணிக்கு ள்ளாகவே முழுமையாக வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி கர்நாடக மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மே 10 அன்று 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட மாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கி, மாலை 6 மணிவரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், மொத்தம் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. கடந்த 2018-அம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 0.31 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் வாக்கு கள் பதிவாகின. மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், அதில் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 பேர் வாக்களித்த னர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு  கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 398 பேரும் (73.68 சதவிகிதம்), பெண் வாக்காளர்கள் ஒரு கோடியே 91 லட்சத்து 92 ஆயிரத்து 372 பேரும் (72.70 சதவிகிதம்), மூன்றாம் பாலினத்தவர்கள் ஆயிரத்து 37 பேரும் (21.05 சதவிகிதம்) தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், மாநிலம் முழுவதும் 34  மையங்களில் நடைபெறுகிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பதிவான வாக்குகளின் எண்ணிக் கைக்கு தகுந்தவாறு வாக்கு எண்ணும் சுற்று கள் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அஞ்சல் வாக்குகளுக்கு 2 மேஜை கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதில் வாக்குச் சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்தி ரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப் பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடவுள்ளனர். ஒவ் வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவி யாளர் இருப்பார்கள். வாக்கு எண்ணும் மையங் களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கண்காணிப்புக் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் என்பதால் தேர்தல் முடிவுகள் பகல்  1 மணிக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறை வடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கர்நாடகத்தில் வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணி முதலே, மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 14 காலை 6 மணி  வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

மே 10 அன்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதி யில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நீடிக்கும், மங்களூரு காவல் எல்லைக்கு உட்பட்ட 11 தொகுதிகளில் மே 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை. அறுதிப் பெரும் பான்மை பெறாத நிலையிலும், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி மீண்டும் மீண்டும் பாஜக அரியணை ஏறியது. இந்த முறையும் அதே கணக்கில்தான் உள்ளது.  நியூஸ் நேசன் - சி.ஜி.எஸ் மற்றும் சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புக்கள், பாஜகவுக்கு 114 முதல் அதிக பட்சமாக 117 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறியிருக்கின்றன.

இந்தியா டுடே - ஆக்சிஸ் இந்தியா மற்றும் டைம்ஸ் நவ் - இ.டி.ஜி ஆகியவற்றின் கருத்துக்கணிப்புக்கள், காங்கிரசுக்கு 113 இடங்கள் முதல் அதிகபட்சம் 140 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. ஏபீபி  நியூஸ் - சி வோட்டர் மற்றும், இந்தியா  டி - சி.என்.எக்ஸ் கருத்துக் கணிப்புக்களும் காங்கிரசுக்கு குறைந்தது 112 முதல்  அதிகபட்சம் 120 இடங்களை வழங்கியிருக் கின்றன. இதனால் காங்கிரஸ் கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.  கர்நாடகத்தில் புதிய ஆட்சியமைவதில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி முக்கிய இடம் வகிக்கும் என்றும் கணிப்புக்கள் வந்துள்ள நிலை யில், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி சிங்கப்பூர் சென்று விட்டார். கடந்த சில வாரங்களாக ஓய்வே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ஓய்வெடுப்பதற்காக அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பிரதான கட்சிகளான பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 217 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆம் ஆத்மி 209 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளது. இவர்கள் தவிர 918 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒரு திருநங்கை, 184 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனர்.