states

img

விவசாயிகள் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்

விவசாயிகள் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள்,  புதிய மின்சார திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லியில் 22வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.  
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமரச குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், இன்று 2-வது நாளாக விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது. இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று தெரிவித்தார். மேலும்  வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.


 

;