states

img

மின்கட்டண உயர்வை கண்டித்து புதுவையில் சிபிஎம் போராட்டம்

புதுச்சேரி,ஏப்.4- மின்கட்டண  உயர்வை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆவேச போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வை புதுச்சேரியில் அறிவித்துள்ளது. அதில் 1 முதல் 100 யூனிட் வரை ரூ. 1.55இல் இருந்து ரூ.1.90 என்றும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ. 2.60 இல் இருந்து 2.90 ஆகவும், 201 - முதல் 300 யூனிட் ரூ.4.65இல் இருந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ரூ.6.5இல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு இணைப்புக்கு நிரந்தர கட்டணமாக, உபயோகிக்கும் அத்தனை கிலோ வாட் மின்சாரத்திற்கும், மொத்தமாக மாதம் ரூ.45 என்று இருந்ததை, ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தனித்தனி யாக மாதம் ஒன்றுக்கு ரூ.30 என உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை களை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசு, மின்சார கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்
பாகூர் மேற்குவீதியில் கொம்யூன் செயலாளர் பி.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், கொம்யூன்குழு உறுப்பினர்கள் கலியன், கலைச்  செல்வன், வடிவேலு, சேகர், அரிதாஸ், கவுசிகன், கிளைச் செயலாளர்கள் முருகையன், வெங்கடாசலம், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மின்சார பொருட்களை தலையில் சுமந்தவாறு ஊர்வல மாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முத்தியால்பேட்டை முத்தியால்பேட்டையில் புதுச்சேரி நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், கலிய மூர்த்தி, சத்தியா, பிரதேச குழு உறுப்பினர்கள் சரவணன், ஆனந்த, சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.