states

img

பஞ்சாப் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் குருநானக் தேவ் மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குருநானக் தேவ் மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நல்வாய்ப்பாக தீ விபத்தில் யாருக்கு காயம் ஏற்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.