பஞ்சாப் ரயில்நிலையத்தில் இருந்த சூட்கேஸில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்ட நேரமாக சிவப்பு நிற சூட்கேஸ் இருப்பதாக இன்று காலை 7 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுதுது அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை கைப்பற்றிய திறந்து பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கண்டனர்.
ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், ஒருவர் சூட்கேஸை விட்டுச் சென்றது பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.