ஹைதராபாத், ஏப். 6 - தெலுங்கானா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு வினாத்தாள் முன் கூட்டியே வெளியான விவகாரத்தில் கைதான பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் நீதிமன்ற உத்தர வின் பேரில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு தேர்வும் பெரும் சர்ச்சை யில் சிக்கி வருகிறது. குறிப்பாக, 10-ஆம் வகுப்பு தெலுங்கு மொழித் தேர்வு நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது அரசுப் பள்ளி ஒன்றின் தேர்வறை கண்காணிப்பாளர், வினாத்தாளை செல்போனில் படம் பிடித்து மற்றொரு அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்பி வைத்தார். இப்படி தெலுங்கு மொழி வினாத்தாள் வெளியான விவகாரம் ஊடகங் களிலும் அம்பலமானது. இதனையடுத்து தெலுங்கானா மாநில அரசு தேர்வறை கண்கா ணிப்பாளர் உட்பட 4 அரசு ஊழியர் களை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டது. எதிர்க்கட்சிகளோ இத னையே சாக்காக வைத்து, தெலுங் கானா கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் செவ்வாயன்று இந்தித் தேர்வு நடைபெற்றது. வழக்கம்போல இந்த தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவே பரபரப்பு ஏற் பட்டது. இதுதொடர்பாக மாநில அரசு தீவிர விசாரணையில் இறங்கியது.
இந்த விசாரணையில் கமலா பூர் தேர்வு மையத்தில் இருந்து பாஜக-வைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர்தான் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வினாத்தாளை லீக் செய்தது தெரியவந்தது. மேலும், பிரசாந்த் என்ற அந்த நபர், முதலாவதாக பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய்-க்குத்தான் வினாத்தாளை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு லீக் செய்துவிட்டு, பண்டி சஞ்சயுடன் தொலைபேசியிலும் பேசியுள்ளார். இந்தப் பின்னணியிலேயே, தெலுங்கானா மாநில அரசின் பத்தாம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவ காரத்தில் பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். “பண்டி குமார் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டார். மேல்நிலைப் பள்ளித் தேர்வுத் தாள்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப் பட்டார்” என்று தெலுங்கானா காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சனிக்கிழமை யன்று தெலுங்கானா வரவுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலை வரே வினாத்தாள் முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.