புதுதில்லி, டிச. 23- விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்திட ஒன்றிய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், சமீபத்திய காலத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நாடுகளின் ஒப்பீட்டுப் பட்டியல் ஏதேனும் அரசிடம் உள்ளதா என்றும், ஆம் எனில், தடகள/ விளையாட்டுகள் வாரியாக, அதன் விபரங்கள் என்னென்ன என்றும், ஆரம்பப்பள்ளி நிலையிலேயே இந்தியர்களுக்கு விளையாட்டுத் துறையில் வெளிப்படுதல் என்ற, ஏதாவது தேவையை அரசு உணர்ந்துள்ளதா என்றும், ஆம் எனில், விளையாட்டில் தொழில் ரீதியான ஈடுபாட்டை மேம்படுத்தவும் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசால் எடுக்கப்பட்ட / எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நட வடிக்கைகள் என்னென்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய இளைஞர் விவகாரம்- விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து மூலம் அளித்த பதில்கள் வருமாறு: 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், பல்வேறு நாடுகள் வென்ற பதக்கங் களின் ஒப்பீட்டுப் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில், விளையாட்டு / விளையாட்டு வீரர் வாரியான வென்ற பதக்க விபரங்கள்:
அமெரிக்கா - 113 (39+41+33)
சைனா - 89 (38+32+19)
ரஷ்யா - 71 (20+28+23)
கியூபா - 15 (7+3+5)
தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிப் பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு, இளைஞர் விவகாரம் - விளையாட்டுத் துறை அமைச்சகம் நிதயுதவியை வழங்குகிறது. வீரர்களது ஆயத்த வேலை களுக்கு தேவையான ஆதரவு அளித்தல், அதாவது வெளிநாட்டு பயிற்சியாளர்கள்/ உதவிப் பணி யாளர்கள், அறிவியல் ரீதியான & மருத்துவ ஆதரவு ஆகியவையும் இதில் அடங்கும். இது தவிர, வெளிநாட்டு பயிற்சி மற்றும் இந்தியா, வெளிநாடு களில் நடைபெறும் சர்வதேச போட்டி களில் பங்கேற்பு ஆகியவைகளுக்கான நிதியுதவிகள் தேசிய விளையாட்டு கூட்டமைப்பிற்கு உதவித் திட்டங்களின் மூலம் அளிக்கப்படுகிறது. மேற்சொன்ன காரணங்களுக்காக, ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு களுக்கும், பட்ஜெட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
மேலும், ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட, பெரிய அளவிலான விளை யாட்டு நிகழ்ச்சிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்புள்ள, திறமை யான தடகள வீரர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஆதரவு அளிக்கப்படு கிறது. சர்வதேச மற்றும் தேசிய அள விலான விளையாட்டுகளில் சிறந்து விளங்க அவர்களை வளர்த்தெடுப்ப தற்காக பல்வேறு வயது பிரிவுகளில் நாடு முழுவதிலும் உள்ள திறமை யான விளையாட்டு வீரர்களை அடை யாளம் காண கீழ்க்கண்ட விளையாட்டு முன்னேற்றத் திட்டங்களை, அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், இந்திய விளையாட்டு ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு செயல்படுத்தி வருகிறது. தேசிய சிறப்பு மையம் (NCOE), SAI பயிற்சி மையம் (STC), STC விரி வாக்க மையம், தேசிய விளையாட்டு திறன் தேடல் (NSTC) மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட தடகள வீரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட விதி களின் படி, பயிற்சி வல்லுநர்கள், விளை யாட்டு கருவிகள், அறிவியல் பூர்வ ஆதரவு, உணவு மற்றும் தங்குமிடம், விளையாட்டுப் பெட்டகம், போட்டிகள் வெளிப்பாடு, கல்விச் செலவு, மருத்து வக் காப்பீடு மற்றும் உதவித்தொகை ஆகியவை மூலம் ஆதரவு அளிக்கப்படு கிறது. விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதை மேம்படுத்தவும் அதிகப்படியான பங்கெடுத்தலை மேற்கொள்ளுவதுமான, இரட்டை நோக்கங்களுடன் ஒன்றிய அரசு, “கேலோ இந்தியா திட்ட”த்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விளையாட்டுக் களை மேம்படுத்தவும், விளையாட்டு நிலையை முன்னேற்றவும், மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பல்வேறு திட்டங்களை உருவாக்கி யுள்ளது. அரங்குகள், விளையாட்டுக் களம், தடகளம் மற்றும் பள்ளி அளவிலான நாட்டில் உள்ள விளையாட்டு பயிற்சி களும் இதில் அடங்கும். பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் விளை யாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த இத்திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதிலும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 733 கேலோ இந்தியா மையங்கள், 29 கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங் கள் மற்றும் 266 அகாடமிகள் ஆகி யவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல் இந்தியா, தங்கம் -1, வெள்ளி- 2, வெண்கலம் -4 என மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.