புதுதில்லி, பிப். 23 - அதிமுக-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட ‘2022 ஜூலை 11 பொதுக்குழு’ செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், பொதுக்குழுவிற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி யான அதிமுகவானது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகி யோரைக் கொண்ட இரட்டைத் தலைமை யாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 2022 ஜூலை 11 அன்று தலைமைக் கழக நிர்வாகி களால் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு, ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, இனிமேல் அதிமுக-விற்கு ஒரே தலைமை என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக் கால பொதுச்செயலாளராக அறிவித்தது. அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவி லிருந்து நீக்குவதாகவும் அறிவித்தது. இந்நிலையில், ஜூலை 11- கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, “ஜூலை 11- அதிமுக பொதுக்குழு செல்லும்; எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம்” என்று 2022 செப்டம்பர் 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரியும், ஜூலை 11-இல் கூடிய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைர முத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ்மகேஸ்வரி, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக எதிர்மனுதாரர் களாக இணைந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஜன வரி 2-ஆவது வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விசாரித்தது. இந்நிலையில் வியாழனன்று (பிப்ரவரி 23) காலை 10.35மணிக்கு தீர்ப்பு வழங்கிய தினேஷ் மகேஸ்வரி, ஹிருஷிகேஷ் ராய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு “2022 ஜூலை 11-இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்கிறோம். அதுபோல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும்” என உத்தரவு பிறப்பித்தனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக செயல்பட வாய்ப்பில்லை என்பதால், அது ஒரு கட்சியின் “செயல்பாட்டு முட்டுக் கட்டைக்கு” வழிவகுக்கும் என்பதாலேயே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வ தாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இர ண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு தீர்ப்பளித்திருந்தது. இந்த அடிப்படை யிலேயே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்பதாக அறி வித்துள்ள உச்சநீதிமன்றம், மற்றபடி ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கின் முடிவை, உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு பாதிக்காது என்றும் கூறி யுள்ளது.