states

img

இடது முன்னணி வாக்கு சதவிகிதம் இரண்டு மடங்கு அதிகரிப்பு!

கொல்கத்தா, பிப்.17- மேற்குவங்க மாநிலத்தில் நான்கு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் முகவர்களை விரட்டியடித்தும் வாக் குச்சாவடிகளை கைப்பற்றியும், பர வலான வன்முறை மூலம் இந்த வெற்றியை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது. சிலிகுரி, சந்தன் நகர், அசன்சோல், பிதான் நகர் ஆகிய நான்கு மாநகராட்சிகளையும் திரி ணாமுல் கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில், இந்த நான்கு மாநகராட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி, கடந்த 2019 நாடா ளுமன்றத் தேர்தல், 2021-இல் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக மான வாக்குகளைப் பெற்று, பாஜக வை மூன்றாவது இடத்திற்கு தள்ளி யிருக்கிறது. இந்த நான்கு மாநகராட்சி களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இடது முன்னணி 6.33 சதவிகித வாக்குகளை யும், காங்கிரஸ் 5.67 சதவிகித வாக்கு களையுமே பெற்றிருந்தன. இது 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 5 சதவிகிதம், இடது முன்னணி 3 சத விகிதம் என மோசமான வகையில் குறைந்தது. ஆனால், 2022 மாநக ராட்சித் தேர்தலில், இடது முன்னணி மட்டும் 16.75 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

இந்த நான்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2019 நாடாளு மன்றத் தேர்தலின்போது 40.70 சத விகிதம், 2021 சட்டமன்றத் தேர்தலில் 38 சதவிகிதம் என்று இருந்த பாஜக வின் வாக்கு சதவிகிதம் 14.5 சதவிகித மாக குறைந்துள்ளது. சிலிகுரி, சந்தன் நகர், அசன் சோல், பிதான் நகர் ஆகிய நான்கு மாநகராட்சிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் சராசரியாக 61 சத விகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இடதுசாரிகள் 16.75 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர். பாஜக 14.5 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 3.5 சதவிகித வாக்கு களையும் பெற்றுள்ளன. தனித்தனியாக எடுத்துக் கொண் டால், சிலிகுரி மாநகராட்சியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திரிணாமுல் 30.11 சதவிகித வாக்கு களையும், பாஜக 50.02 சதவிகித வாக்குகளையும், இடது முன்னணி யும் காங்கிரசும் கூட்டாக 16.14 சத விகித வாக்குகளையும் பெற்றிருந்தனர்.  தற்போது மாநகராட்சித் தேர்த லில் திரிணாமுல் 47.24 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள நிலை யில் பாஜக வெறும் 9.8 சதவிகித  வாக்குகளையே பெற்றுள்ளது. அதேநேரம் இடது முன்னணி மட்டும் தனியாக 18.9 சதவிகித வாக்கு களைக் குவித்துள்ளது. காங்கிரஸ் 5.32 சதவிகித வாக்குகளைப் பெற் றுள்ளது.

சந்தன் நகர் மாநகராட்சியில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திரி ணாமுல் 47.6 சதவிகிதம், பாஜக 30.7 சதவிகிதம், இடது முன்னணி யும் காங்கிரசும் கூட்டாக 18.4 சத விகிதம் என வாக்குகளைப் பெற்றி ருந்தன. தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் 59.42 சத விகித வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இடது முன்னணி மட்டும்  27.37 சதவிகித வாக்குகளைப் பெற்று நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கு பாஜகவுக்கு 9.8 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள் ளது. காங்கிரஸ் 1.37 சதவிகித வாக்கு களைப் பெற்றுள்ளது. அசன்சோல் மாநகராட்சியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணா முல் 48.72 சதவிகித வாக்குகளை யும், பாஜக 44.5 சதவிகித வாக்கு களையும் வாங்கியிருந்த நிலையில், இடதுமுன்னணியும் காங்கிரசும் கூட் டாக 5.26 சதவிகித வாக்குளைப் பெற் றிருந்தன. தற்போது 2022 மாநக ராட்சித் தேர்தலில் திரிணாமுல் 51.42 சதவிகித வாக்குகளையும், பாஜக 17.05 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ள சூழலில், இடதுமுன் னணி மட்டும் 11.27 சதவிகித வாக்கு களை வாங்கியுள்ளது. காங்கிரஸ் 4.15 சதவிகித வாக்குகளைப் பெற் றுள்ளது.

இதுபோலவே பிதான் நகரிலும் இடது முன்னணி தனது வாக்குகளை அதிகரித்துக் கொண்டுள்ளது. பிதான் நகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்த லில் திரிணாமுல் 46.85 சதவிகித வாக்குகளையும், பாஜக 41.91 சதவிகித வாக்குகளையும், இடது முன்னணியும் காங்கிரசும் கூட்டாக 7.9 சதவிகித வாக்குகளையும் வாங்கி யிருந்தன. ஆனால், 2022 மாநக ராட்சித் தேர்தலில் திரிணாமுல் 74.1 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நிலையில், இடது முன்னணி மட்டும் 10.95 சதவிகித வாக்குகளை வாங்கி யுள்ளது. பாஜகவுக்கு 8.2 சதவிகித வாக்குகளும், காங்கிரசுக்கு 3.42 சத விகித வாக்குகளும் கிடைத்துள்ளன. தேர்தல் நடந்த நான்கு மாநக ராட்சிகளில் 3-இல் இடது முன்னணி இரண்டாமிடம் பிடித்து, பாஜக-வை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. சட்ட மன்றத் தேர்தலைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான வாக்கு களைப் பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் கொல்கத்தா மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலி லும், இடது முன்னணி, பாஜக-வை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டாக 5.1 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த இடது முன்னணி, மாநகராட்சித் தேர்த லில் தனித்து 13 சதவிகித வாக்கு களைப் பெற்றது. பாஜக 8 சதவிகித வாக்குகளையே பெற்றது.  இந்த முடிவுகள், மேற்கு வங்க மாநிலத்தில் இடது முன்னணிக்கு மீண்டும் மக்கள் மத்தியில் செல் வாக்கு தொடர்ந்து அதிகரித்து வரு வதைக் காட்டுவதாக அமைந் துள்ளது.