states

img

எல்லையில் பதற்றமான சூழல் ; பதுங்குக் குழிகளை தயார் செய்யும் ஜம்மு- காஷ்மீர் மக்கள்

எல்லையில் பதற்றமான சூழல் ; பதுங்குக் குழிகளை தயார் செய்யும் ஜம்மு- காஷ்மீர் மக்கள்

வெகு ரக ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணம் எனக் கோரி ஒன்றிய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அந்நாட்டு குடிமக்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதி ராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலை யில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த பதற்றமான சூழலுக்கு இடையே சனிக்கிழமை அன்று வெகு ரக ஏவு கணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய தாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர் பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தரையிலிருந்து தரை இலக்கு களை தாக்கி அழிக்கும் வகையிலான  இந்த ஏவுகணை 450 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. எங்கள் ராணு வத்தின் மேம்பட்ட ஏவுகணை அமைப்பு, ராணுவ வீரர்கள் என அனைவரும் இந்தியா வின் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலை யில் உள்ளனர்” என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் நடத்தியுள்ள இந்த ஏவுகணை சோதனையால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜம்மு- காஷ்மீர் மக்கள் போர் பதற் றத்தால் புதைக் குழிகளை தயார் செய்யும் பணியை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.