இந்த ஆண்டு இறுதியில் தெலுங் கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக் கான சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிர தமர் மோடி 5 மாநிலங்க ளிலும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அரசு விழாவை தனிப் பட்ட பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, ஞாயிறன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை யை திறந்துவைத்து, பல்வேறு திட்டங் களை அறிவித்தார். தொடர்ந்து தெலுங்கானா மாநி லத்தில் ரூ.13.500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நலத்திட்டங்கள் அடிக் கல் நாட்டு விழாவில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பங்கேற் காமல் விழாவை புறக்கணித்தார். இப் பொழுது மட்டுமல்ல ஏற்கெனவே 5 முறை தெலுங்கானா வந்த பொழுது முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை புறக்கணித்தார்.