10 மசோதாக்களை காலதாமதப்படுத்தி திருப்பி அனுப்பியிருக்கும் ஆளுநர்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
புதுதில்லி, நவ. 20 - 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை யும் இப்போதுதான் திருப்பி அனுப்பு கிறார்; அதுவும் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே செயல்பட்டிருக்கிறார் என்றால், உண்மையில் 3 ஆண்டு களாக ஆளுநர் என்ன செய்து கொண்டி ருந்தார், என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், இந்த 10 மசோதாக்களும் சட்டமன்றத்தில் இரண்டாவது முறை யாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண டிசம்பர் 1 வரை தாங்கள் காத்திருக்கப் போவதாக வும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்வைத்து, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் நிறை வேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வில்லை; இதனால் திட்டங்களை நிறை வேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது; எனவே, மசோதாக்கள் மீது முடி வெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ண யித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, நவம்பர் 10 அன்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, “சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது” என்று கூறி யதுடன், அவ்வாறிருக்கையில் “தமிழக அரசு அனுப்பிய கோப்புகளின் மீது முடி வெடுக்காதது ஏன்?” என்று பதிலளிக்கு மாறு ஆளுநருக்கு உத்தரவிட்டது.
நீதிபதிகளை ஏமாற்ற ஆளுநர் தந்திரம்
நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போ தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 8 மசோதாக்கள் என மொத்தம் 10 மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என். ரவி, நவம்பர் 13 அன்று அவசர அவசரமாக தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். ‘மசோதாக்கள் தன்னிடம் இல்லை’ என்று காட்டிக்கொள்வதற்காக அவர் தந்திரமாக இந்த வேலையைச் செய்தார். ஆனால், நவம்பர் 18 அன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டிய தமிழ்நாடு அரசு, ஆளுநர் அனுப்பிவைத்த 10 மசோதாக்களையும் 2-ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்தது. இதன்மீது ஆளுநர் தற்போது முடிவெடுத்தாக வேண்டும் என்ற காட்டாயத்தை உருவாக்கியது. இந்நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே தொடர்ந்திருந்த வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி கள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வில், திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்கி, பி. வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
காரணம் கூறாமல் நிராகரிக்க முடியாது
இதில், முகுல் ரோத்கி வாதிடுகை யில், “2020-ஆம் ஆண்டு முதல் 13-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. எந்த ஒரு காரணமும் இல்லாமல் மசோதாக்களை ஆளுநர் ரவி நிராகரிக்கிறார். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்கு வந்து முறையிட முடியாது. ஆளுநர் ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது (‘withhold assent’) என்று வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200- ஆவது பிரிவு. எனவே, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, ஆளுநர் ரவி எந்தவித விளக்கத்தையும் கூறா மல் மசோதாக்களை திருப்பி அனுப்பி இருப்பது சட்டத்தை மீறியதாகும். ஆளுநரின் செயல்பாட்டால் 7.3 கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ‘ஒப்புதலை நிறுத்தி வைக்கிறேன்’ (‘I withhold assent’) என்ற குறிப்புடன் மட்டுமே ஆளு நர் மசோதாக்களை திருப்பி அனுப்பிய தால் சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். எனவே, இவற்றின்மீது ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு மசோதாவிற்காக வும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட முடியாது” என தெரிவித்தார்.
இனி ஜனாதிபதிக்கும் அனுப்ப முடியாது
மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இப்போது ஆளுநர் முன்பு 15 மசோதாக்கள் நிலுவை யில் உள்ளன. இதில் 10 மசோதாக்கள் சட்டசபையில் ‘மீண்டும் நிறைவேற்றப் பட்டவை’ என்று குறிப்பிட்டார். “இரண்டாம் முறை இயற்றி அனுப்பினால் அதனை நிதி மசோதாவாகவே (Money Bill) பார்க்க வேண்டும். சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது; மசோதாக்களை ஆளுநரால் கிடப்பில் போடவும் முடியாது. மசோதாக்களை நிறுத்தவும் ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசு மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், இப்போதும் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்பது, அச்சத்தை தரக் கூடியதாக இருக்கிறது. எனவே, மசோதாக்கள் மீது ஆளு நர்கள் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும். மசோதாக் களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும், ஆளுநருக்கு அதனை நிறுத்திவைக்க அதிகாரம் இல்லை” என்றும் வாதங்களை வைத்தார்.
3 ஆண்டுகளாக என்ன செய்தார்?
அப்போது, உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்த பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி, மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநரின் செயலுக்கு தங்களின் அதிருப்தியை வெளியிட்டனர். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசுகையில், உச்ச நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. ஆளுநர் 13-ஆம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதாவது, நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்த பிறகு ஆளுநர் இந்த முடிவை எடுத்தார் என்று அர்த்தம். 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருந்தார்?” என அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி யிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, “தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி 2021 நவம்பரில்தான் பதவி யேற்றார்” என்று அட்டர்னி ஜெனரல் வெகு சாதாரணமான ஒரு பதிலை அளித்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், தாமதத்திற்கு எந்த ஆளுநர் காரணம், என்பதல்ல; பிரச்சனை ஆளுநர் அலுவலகம் சம்பந்தப்பட்டது; அரசி யலமைப்பு செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை” என்று சுட்டிக்காட்டினர்.
முடிவைக் காண நாங்களும் காத்திருக்கிறோம்!
அப்போது, “தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து மசோதாக்கள் அரசாங்கத்தாலேயே திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஒன்பது மசோதாக்கள் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக ஒதுக்கப்பட்டு, பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2023-இல் பெறப்பட்ட ஐந்து மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன” என்று ஆளுநர் அலுவல கம் அளித்துள்ள பதிலைச் சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், “அரசியலமைப்பு பிரிவு 200-இன் படி ஆளுநர் ஒப்புதல் அளிக்க லாம், ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் முடிவுக்காக அனுப்பலாம், அல்லது சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்ப லாம். அவ்வாறு திருப்பி அனுப்பும் போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்பு இடம்பெற வேண்டும். சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால், அவை நிதி மசோதாக்களுக்கு நிகரானவையாக மாறிவிடும்” என குறிப்பிட்டார். ஆளுநருக்கு உள்ள துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயல்வதாகவும், இதுவே முக்கியப் பிரச்சனை என்றும் அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி தெரிவித்தார். தற்போது அனுப்பப்பட்டுள்ள மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு சற்று அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். இதையடுத்து நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்பதையும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் அறிய டிசம்பர் 1 வரை நீதிமன்றம் காத்திருக்கப் போவதாக கூறி, ஆளுநர் முடிவெடுக்க அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், விசாரணையை ஒத்திவைத்தார்.
முக்கியக் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல்?
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், திங்களன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி தவிர பிற அரசுப் பணி நியமனங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி தவிர எஞ்சிய அரசு பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நன்னடத்தை காரணங்களால் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 580 பரிந்துரைகள் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் 362 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 165 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 53 பரிந்துரைகள் கிடப்பில் உள்ளதாகவும் தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.