states

img

பஞ்சாப்பில் சரண்ஜித்திற்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்!

சண்டிகர், ஜன.24- பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர்  சோனு சூட், காங்கிரஸ் தலை மையை சூசகமாக வலி யுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் நடிகர் சோனு சூட் கூறியி ருப்பதாவது: ‘நான் முதல்வர் சன்னி யை சந்தித்தேன், அவர் ஒரு இயல்பான மனிதர். அவர் இயற்கையாகவே சந்திப்ப வர்களை சிரிக்க வைக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் அவர் முதலமைச்சராக இருந்த பணி பாராட்டுக்குரியது. ஆனால் யாரும் முதல்வராக பணியாற்றுவதற்கு இது மிகக் குறைந்த நேரமே. அவர் பேட் செய்யப்போய்  பந்தின் மேல் கண்ணை வைத் தது போல் இருக்கிறது. ஆனால், திடீரென்று தேநீர் இடை வேளை (தேர்தல்) அறிவிக் கப்பட்டு விட்டது. எனவே, தேநீர் இடைவேளைக்கு (தேர்தலுக்கு பிறகு) பிறகும்  அவர் பேட்டிங் செய்ய வேண் டும் (முதல்வராக வர வேண் டும்) என்று நான் நினைக்கி றேன். மாநில காங்கிரஸ் தலை வர் நவ்ஜோத் சிங் சித்துவும், நல்ல மற்றும் நேர்மையான மனிதர். அவர் எப்போதும் இதயத்தில் இருந்து பேசு கிறார்.  நான் எந்தக் கட்சியுடனும் தொடர்பு கொள்ளவில்லை. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த எனது சகோதரி மாள விகாவை மட்டுமே ஆதரிக்கி றேன். மாளவிகா போட்டி யிடும் மோகாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல் லூரிகள் மற்றும் தர்மசாலாக் கள் (சத்திரம்) என் குடும்பத்தி னரால் கட்டப்பட்டது. என் அம்மா நிறைய குழந்தை களுக்கு இலவசமாக கற்பித் துள்ளார். நானும், சகோதரி யும் எங்களது தாய் வழியை பின்பற்றுகிறோம். இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.