நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு 5,529 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பாணை வெளியாகியுள்ள நிலையில், பிப்., 23-ஆம் தேதி (புதனன்று) முதல் மார்ச் 23-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தகுதிகள்: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம். கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.37,200 - ரூ.1,17,600 வயது வரம்பு உயர்வு: குறைந்தபட்சம் 18 வயது. உச்சபட்ச வயது வரம்பாக 30. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தோ்வுகள் நடத்தப்படாத நிலையில், வயது வரம்பு 30-லிருந்து 32-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, அருந்ததியர்கள், பிற்படுத்தப்பட்டோர்,
அனைத்து சமூகத்தை சேர்ந்த விதவைகள் போன்றோர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு (குரூப் 2ஏ தேர்வில் முதல்நிலைத் தேர்வும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது) தேர்வு நடைபெறும் நாள்: மே 21-ஆம் தேதி தேர்வு முடிவுகள்: ஜூன் 5-ஆம் தேதி விண்ணப்பிக்க www.tnpsc.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். உதவிக்கு : 044-25332833 (டிஎன்பிஎஸ்சி ஆணையம்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் முதல்நிலைத் தேர்வு:
கொள்குறி வகையைச் சேர்ந்ததாகவும் முதன்மைத் தேர்வு: விரிவாக எழுதும் எழுத்துத் தேர்வு முதன்மைத் தேர்வு தகுதி: சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற்றவர்களில் 1:10 என்ற அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவா். அதாவது 70,000 பேர் எழுதலாம். கேள்விகள், மதிப்பெண்கள்: தமிழ், ஆங்கிலம் என இரு பிரிவுகளில் எழுதலாம். 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள். தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழிக்கான தகுதித் தேர்வாக இருக்கும். 100 கேள்விகளில் பொது அறிவியல் பிரிவில் 75 மதிப்பெண்களுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
(ஆங்கிலத்தில் தேர்வெழுதுவோருக்கு தமிழ் மொழி கேள்வியில் மட்டும் மாற்றம் இருக்கும்) தேர்வு நேரம் மாற்றம்: காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடையும். இதற்கு முன் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. மதியம் நடைபெறும் தோ்வுகளுக்கான நேரத்தில் மாற்றமில்லை. எப்பொழுதும் போல பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும். தேதியை மாற்ற வலியுறுத்தல் போட்டித் தேர்வாளர்கள் அதிகம் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு மே 21-ஆம் தேதி சனியன்று நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி-யில் நடைபெறும் மிகப்பெரிய தேர்வுகள் பொதுவாக ஞாயிறன்று நடைபெறும். ஆனால் குரூப் 2, 2ஏ தேர்வு சனியன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் இத்தேர்வுகளில் முழுமையாக பங்கேற்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மே 21-க்கு பதில் 22-ஆம் தேதி (ஞாயிறன்று) நடத்த போட்டித் தேர்வாளர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.