states

img

இந்தியா, ஆப்கானிஸ்தானல்ல; இது மதச்சார்பற்ற நாடு!

மும்பை, பிப்.12- கர்நாடக மாநில கல்வி நிலை யங்களில், இஸ்லாமிய மாணவி யர் ஹிஜாப் அணிந்து வரு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏபிவிபி உள்ளிட்ட சங்-பரிவார் அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் பாஜக ஆத ரவு பாலிவுட் நடிகையான கங் கனா ரணாவத்தும் இஸ்லாமிய மாணவியர் மீது வெறுப்பை கக்கியுள்ளார். எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் என்பவ ரின் பதிலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், “நீங்கள் (இஸ்லாமிய மாணவியர்) துணிச் சலைக் காட்ட நினைத்தால் ஆப்  கானிஸ்தானில் புர்கா அணியா மல் துணிச்சலைக் காட்டுங்கள். வீட்டு விடுதலையாக நினையுங் கள், உங்களையே சிறைப்படுத் திக் கொள்ளாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதி விற்கு, மற்றொரு பாலிவுட் நடி கையான சபனா ஆஸ்மி எதிர் வினையாற்றியுள்ளார். “நான் தவறாக சொன்னால் என்னைத் திருத்துங்கள்... எனக்குத் தெரிந்து ஆப்கானிஸ்தான் ஒரு  இஸ்லாமிய நாடு. இந்தியா இப்போதுவரை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு?” என்று பதி விட்டுள்ளார். மத அடிப்படை வாதிகள் ஆட்சிசெய்யும் ஆப்கா னிஸ்தானுடன், ஜனநாயக இந்தியாவை ஒப்பிடுவதா? என்று கண்டித்துள்ளார். “மதச் சார்பற்றவர்கள் ஹிஜாப், புர்காவை எதிர்த்தால் அதில் அர்த்தமிருக்கும். தோளில் காவித்துண்டு போட்டிருப்ப வர்கள் அதைச் செய்யக் கூடாது. இவர்கள்தான் மங்க ளூருவில் உணவகத்தில் காபி குடித்த இந்துப் பெண்களையும் அடித்தார்கள் என்பதை நினை வில் கொள்வோம் என்று சப்னா ஆஸ்மியின் கணவரும் பிரபல கவிஞருமான ஜாவேத் அக்த ரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.