புதுதில்லி, மார்ச் 4 - உக்ரைன் உடனான மோதலைக் காரணமாக வைத்து, ரஷ்யா மீது, அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. பதிலடியாக இந்த நாடுகள் மீது ரஷ்யாவும் தற்போது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடை காரண மாக, ரஷ்யா மற்றும் அர்மீனியா, அஜெர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளுக்கு (Commonwealth of Independent States - CIS), இந்திய ஏற்றுமதியாளர்கள் உடனடியாக 50 கோடி டாலர் மதிப்பிலான பொருட் களை ஏற்றுமதி செய்வதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர். உக்ரைன் மீதான மோதலை அடுத்து, அரசு நடத்தும் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (Export Credit Guarantee Corporation of India) கடந்த வாரம் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற் கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றது.
தொழில்துறை புள்ளி விவரங்களின்படி இந்தியா ஆண்டு தோறும் 250 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவுக்கும், 150 கோடி டாலர் மதிப்பிலான பொருட் களை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கும் (CIS) ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மட்டும் மாதம்தோறும் சுமார் ரூ. 2,260 கோடி மதிப்புள்ள தொழில்நுட்பம், வீட்டு உபயோக, ஆயத்த ஜவுளி கள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல, உக்ரைனுக்கு ரூ.190 கோடி மதிப்பி லான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. எரிபொருள், வர்த்தக கட்டுப்பாடு கள் தீவிரமடையும் பட்சத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய ஜவுளிகள் ஏற்றுமதியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ஜவுளித் துறையில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்தியா விலிருந்து சுமார் 40 சதவிகிதம் ஆடை கள் ஏற்றுமதியாகின்றன.ஆனால், ரஷ்ய வங்கிகள் மீதான பொருளா தார தடைகள் மற்றும் பால்டிக் பிராந்தி யத்தில் உள்ள துறைமுகங்களில் ஏற்படும் இடையூறுகள் போன்றவை காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ரஷ்யா, உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள சிஐஎஸ் நாடுகளுக்கு, பிற நாடுகள் ஏற்றுமதி செய்வதிலும், அங்கிருந்து பிற நாடுகளுக்கு இறக்கு மதி செய்வதிலும் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் மேலும் மோசமடையும் என்று ‘மொண்ட லெஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. காட்பரி டெய்ரி மில்க் மற்றும் ஓரியோ பிஸ்கட் தயாரிப்பு நிறுவன மான ‘மொண்டலெஷ்’ இதுதொடர்பாக மேலும் கூறுகையில், கோதுமை முதல் எண்ணெய் சரக்கு விநியோக சங்கிலிகள் சீர்குலைந்து போவதால் பணவீக்க அழுத்தங்கள் மோசமடையும் என்று தெரிவித்துள்ளது.