மக்களவை தேர்தலில் காங் கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு (கேரளா), ரேபரேலி (உத்தரப்பிர தேசம்) என இரண்டு தொகுதிகளி லும் வெற்றி பெற்றார். இந்நிலையில், தனக்கு வாக்க ளித்த வயநாடு தொகுதி மக்க ளுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறு கையில்,“இரண்டு தொகுதி களில் எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் உள்ளது. ஆனால் துர திருஷ்டவசமாக பிரதமர் மோடி யை போல் நான் கடவுளால் வழி காட்டப்படுபவன் அல்ல. நான் ஒரு சாதாரண மனிதன். மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப் பட்டவர் அல்ல. தேர்தலின்போது முதலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறினார். பின்னர் 300 தொகுதிகளில் வெல்வோம் என்றும், அதன் பின்னர் 300 இடங் கள் என்ற முழக்கத்தையும் கை விட்ட மோடி, நான் சாதாரண மனி தன் அல்ல, தனது தாய் மறை வுக்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்ததாகவும், என்னை இந்த பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்ப தாகவும் கூறினார். மோடி கூறிய பரமாத்மா விசித் திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்கும்படியே மோடியின் பர மாத்மா கூறுகிறது. மும்பை, லக்னோ விமான நிலையங்களை அதா னிக்கு கொடுக்கும்படி மோடி யிடம் பரமாத்மா கூறியுள்ள நிலை யில், விமான நிலையங்களை யும் கொடுத்தது போல மின் நிலை யங்களையும் கொடுக்கும்படி பரமாத்மா கூறியுள்ளாராம். மோடி யிடம் பேசுவதுபோல் என்னிடம் பேச பரமாத்மா இல்லை. எனது கடவுள் நாட்டின் ஏழை மக்கள் தான்” என்று கூறி பிரதமர் மோடி யை வெளுத்து வாங்கியுள்ளார்.