புதுதில்லி, ஏப்.30- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட் டோர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதி ராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு வாரம் நீடித்ததால் பதறிய ஒன்றிய பாஜக அரசு, இந்திய முன்னணி குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை ஆணை யம் அமைத்தது. மேரி கோம் தலை மையிலான ஆணையம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பின்பும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கொதிப்படைந்த மல்யுத்த வீராங்கனைகள் கடந்த வாரம் மீண்டும் தில்லியில் போராட் டத்தில் குதித்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வெள்ளியன்று காலதாமதமாக தில்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் வருகிறது.
போராட்டம் தொடரும்
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த போதிலும் மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து விலக வேண்டும்; அவரை சிறையில் அடை க்க வேண்டும்; அதுவரை போராட்ட த்தை கைவிடும் என்ற பேச்சுக்கே இட மில்லை என மல்யுத்த வீராங்கனை கள் கூறியுள்ளனர்.
முரண்டு பிடிக்கும் பிரிஜ் பூஷன்
இதுதொடர்பாக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் செய்தியாளர்களி டம் கூறியதாவது: “நான் நிரபராதி. உச்சநீதிமன் றம் மற்றும் தில்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த வகையான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கி றேன். நான் பதவி விலகுவது ஒன் றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் குற்றச்சாட்டி னை ஏற்றுக்கொண்டது போல் ஆகி விடும். வழக்குப்பதிவு செய்யப்பட்ட பொழுதிலும் வீராங்கனைகள் இன்னும் தர்ணாவில் அமர்ந்துள்ள னர். அவர்கள் ஏன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு அமைச்ச கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசு கிறார்கள்?” என்று எரிச்சலைக்கொட்டினார்.
பெருகும் ஆதரவு
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், காங்கிரஸ் பொதுச் செயலா ளர் பிரியங்கா காந்தி, தில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என அரசியல், விளை யாட்டுத்துறை உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்ற னர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சல்மான் அனீஸ் சோஸ் தில்லியில் நீதி கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு, நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுக்க வேண்டும் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,“அன்புக்குரிய அமிதாப் பச்சன் அவர்களே, நீதி கேட்டு போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இந்தியா வின் அதிக செல்வாக்கு கொண்ட குரல்களின் ஆதரவைப் பெற அவர்கள் தகுதியானவர்கள்தான். தயவு செய்து நீங்களும், உங்களைப் போல உள்ள மற்ற சூப்பர் ஸ்டார்களும் இவர்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.